ADDED : ஜூன் 10, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புளியம்பட்டி கூட்டுறவு கடன் சங்கம் முன்பு, தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் பயிர் கடன்களை முழுமையாக அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஊர்வலமாக வந்து வங்கியை முற்றுகையிட்டனர்.
விவசாயிகளின் சங்க மாவட்ட தலைவர் ராம்பாண்டியன், செயலாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
