ADDED : டிச 10, 2024 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் களப்பணியாளர்களின் பணிகளை கணக்கில் கொண்டு ஆய்வு செய்து, மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்க வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட துணைத் தலைவர் மணிராஜன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
இதில் கோட்டப் பொருளாளர் வைரமுத்து உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.