ADDED : செப் 29, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் மூன்று நாட்கள் திறன் வளர் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
இதில் முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி பேசினார். மாணவர்கள் தங்களது தனித்திறனை வளர்த்து கொள்தல், ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவது ஆகியவை குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இதில் கல்லுாரி செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். முதல்வர் செந்தில் வாழ்த்தினார். நிர்வாகிகள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.