UPDATED : ஜூன் 04, 2026 05:29 PM
ADDED : ஜூன் 04, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் , வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் சார்பில், பழங்கள் மற்றும் காய்கறிகளின் பதப்படுத்துதல் சேமிப்பு , சிப்பமிடுதல் குறித்தான திறன் மேம்பாட்டு பயிற்சி 2 நாட்கள் நடந்தது.
மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் ராமசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பேராசிரியர்கள் பாண்டியராஜன், கண்ணன் ,ராமலக்ஷ்மி, பாலசுப்பிரமணியன் இணை பேராசிரியர் நல்லகுரும்பன் பேசினர். ஏற்பாடுகளை பேராசிரியர் பாலகிருஷ்ணன் ,அலுவலர்கள் செய்தனர். இணை பேராசிரியர் அகிலா நன்றி கூறினார்.
----
