/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கேரளாவிற்கு ரயிலில் ரேஷன் அரிசி கடத்தல்
/
கேரளாவிற்கு ரயிலில் ரேஷன் அரிசி கடத்தல்
ADDED : மே 27, 2025 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: கேரளா செல்லும் ரயிலில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., சுரேஷ் தலைமையில் போலீசார் குருவாயூர் எக்ஸ்பிரசில் சோதனை செய்தனர்.
முன்பதிவு இல்லாத பெட்டியில் இருக்கைக்கு அடியில் ரேஷன் அரிசி மூடைகளில் வைக்கப்பட்டிருந்தது. கேட்பாரற்று கிடந்த சுமார் 110 கிலோ அளவிலான ரேஷன் அரிசியை மீட்டு விருதுநகர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தனர்.