/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருடு போன பட்டாசுகள் பறிமுதல்: ஒருவர் கைது
/
திருடு போன பட்டாசுகள் பறிமுதல்: ஒருவர் கைது
ADDED : ஜன 14, 2026 06:17 AM
சாத்துார், வெம்பக்கோட்டை வி.மீனாட்சிபுரம் கணேச பாண்டியன், 48. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தகர செட்டு அமைத்து சரவெடிகள் தயாரித்தார். வருவாய்த் துறையினர் பட்டாசுகளை பறிமுதல் செய்து தகர செட்டிற்கு சீல் வைத்திருந்தனர்.
சில வாரங்களுக்கு முன்பு சாத்துார ஜே. எம். 2 நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற தலைமை எழுத்தர் சீல் வைக்கப்பட்ட தகர செட்டிற்கு சென்று பார்வையிட்ட போது சரவெடி பட்டாசுகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
போலீசார் விசாரணையில் வி.மீனாட்சிபுரம் கணேச பாண்டியன் பட்டாசுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. அவரை தீவிரமாக போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அவர் மற்றொரு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த இடத்திலிருந்து பட்டாசுகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த போது போலீசார் பட்டாசுடன் லாரியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

