/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளியில் கதை கூறல்- பயிற்சி பட்டறை
/
பள்ளியில் கதை கூறல்- பயிற்சி பட்டறை
ADDED : ஏப் 21, 2025 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் ஸ்ரீ ரமண அகாடமி மேல்நிலைப் பள்ளியில் கதை கூறல் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி ஆலோசகர் டாக்டர் கு.கணேசன் தலைமை வகித்தார்.
ஆசிரியை சுகனேஸ்வரி வரவேற்றார். ரேணுகாதேவி அறிமுகம் செய்தார். புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து டாக்டர் கு.கணேசன் பேசினார்.
மதுரையை சேர்ந்த கதைச் சொல்லி சரவணன் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கதை சொல்ல வேண்டிய அவசியம் குறித்து பேசினார். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டன. ராதா ருக்மணி நன்றி கூறினார். ஆசிரியை தாரணி தொகுத்து வழங்கினார்.
ஏற்பாடுகளை முதல்வர் கல்யாணி, ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி, நிர்வாகி ராமராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் செய்தனர்.

