ADDED : பிப் 12, 2026 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி துய்யனூரை சேர்ந்த பிச்சை மகன் லிங்கேஸ்வரன் 19.
இவர் ஐ.டி.ஐ., படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் வாங்க டூவீலரில் நரிக்குடிக்கு சென்றார். அப்போது நரிக்குடியை சேர்ந்த அதுனான் 36, டிராக்டரில் நெல் மூடைகளை ஏற்றி வந்தார்.
நரிக்குடி சமத்துவபுரம் அருகே சென்ற போது டிராக்டர் டூவீலரில் மோதியதில் லிங்கேஸ்வரன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். நரிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லிங்கேஸ்வரனின் உடல் உறுப்பு தானமாக வழங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்து தானம் வழங்கப்பட்டது.

