/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உலக, அனுபவ அறிவை பெற ஊக்கமூட்டும் புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் குவியும் மாணவர்கள்
/
உலக, அனுபவ அறிவை பெற ஊக்கமூட்டும் புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் குவியும் மாணவர்கள்
உலக, அனுபவ அறிவை பெற ஊக்கமூட்டும் புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் குவியும் மாணவர்கள்
உலக, அனுபவ அறிவை பெற ஊக்கமூட்டும் புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் குவியும் மாணவர்கள்
UPDATED : நவ 22, 2025 04:51 AM
ADDED : நவ 22, 2025 04:30 AM

விருதுநகர்: ஒருவர் தன் வாழ்வில் புத்தகங்களை வாங்க துவங்கி விட்டால், அவை வாழ்வின் ஆகச்சிறந்த நல்வரவாக மாறி விடுகின்றன. தமிழ் மொழிக்குள் எவ்வளவு இனிமை, தாய்மை, நுண்மை, வலிமை உள்ளதோ அதே வளம் கொண்ட சொற்களை அடங்கிய புத்தகங்களுக்கும் உண்டு.
உலக அறிவைப் பெறுவதற்கு நாம் பல்வேறுபட்ட புத்தகங்களை வாசிக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் அனைவரும் வாசிப்பின் நேசிப்பையும், ருசியையும், இன்பத்தையும் கண்டறிய வேண்டும். அலைபேசிக்குள் முடங்கி கிடக்காமல் புத்தகத்திருவிழாக்கள் நோக்கி இளம் பட்டாளம் பல படையெடுக்க துவங்கி விட்டன. அதற்கு விருதுநகர் புத்தகத் திருவிழாவே சாட்சி.
காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கும் இங்கு குடும்பத்தலைவிகள் பலர் வந்து செல்கின்றனர். இங்கு வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி உண்டு. அனுமதி இலவசம்.
தினமலர் சந்தா செலுத்தினால்
ரூ.1000 மதிப்பில் புத்தகங்கள் இலவசம்
புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 33ல் தினமலர் நாளிதழின் தாமரை பிரதர்ஸ் மீடியா ஸ்டாலில் சந்தா ஒன்று பலன் மூன்று சலுகை வழங்கப்படுகிறது. ரூ.1999 செலுத்தி ஆண்டு சந்தாவில் இணைந்தால் ஓராண்டிற்கான தினமலர் நாளிதழ், ரூ.5 லட்சத்தில் வீட்டு உடைமைகளுக்கான காப்பீடு, ரூ.5 லட்சத்தில் தனிநபர் விபத்து காப்பீடு, விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவிற்கு ரூ.1 லட்சம் ஆகிய பலன்கள் கிடைக்கின்றன. சந்தா செலுத்தினால் கூடுதல் பலனாக ரூ.1000 மதிப்புள்ள தாமரை பிரதர்ஸ் மீடியாவின் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த புத்தகங்களை தாமரை பிரதர்ஸ் அரங்கில் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

