/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாணவர்கள் படிப்போடு தனி திறமைகளை வளர்க்க வேண்டும்
/
மாணவர்கள் படிப்போடு தனி திறமைகளை வளர்க்க வேண்டும்
ADDED : அக் 22, 2024 04:30 AM
காரியாபட்டி: பட்டப் படிப்பு மட்டும் படிக்காமல் மாணவர்கள், தனி திறமைகளை வளர்க்க வேண்டும் என பட்டமளிப்பு விழாவில், காந்தி கிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழக துணை வேந்தர் பஞ்சநாதம் பேசினார்.
காரியாபட்டி சி.இ.ஓ.ஏ., கல்லுாரியில் 3ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநாதம், மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது,
கல்வி என்பது பட்டம் வாங்க மட்டுமல்ல மேலும் மேலும் படிக்க வேண்டும். பட்டப் படிப்பு மட்டும் படிக்காமல் தனி திறமைகளை வளர்த்து வாழ்வில் முன்னேற வேண்டும். சமுதாயத்தில் மக்களுக்கு தொண்டு செய்யும் நிலையை உருவாக்குவதற்கான தகுதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
நிறுவனர் ராசா கிளைமாக்ஸ், செயல் தலைவர் சாமி, இயக்குனர் பிரகாஷ், துணைத் தலைவர்கள் விக்டர் தன்ராஜ், சவுந்தரபாண்டி, தாளாளர் சந்தோஷ் குமார், முதல்வர் சண்முகப் பெருமாள், துணை முதல்வர் செந்தமிழ் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

