sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கல்லுாரி விடுதிகளில் அடிப்படை வசதிகளுக்கு ஏக்கம்: இடநெருக்கடியில் தவிக்கும் மாணவர்கள்

/

கல்லுாரி விடுதிகளில் அடிப்படை வசதிகளுக்கு ஏக்கம்: இடநெருக்கடியில் தவிக்கும் மாணவர்கள்

கல்லுாரி விடுதிகளில் அடிப்படை வசதிகளுக்கு ஏக்கம்: இடநெருக்கடியில் தவிக்கும் மாணவர்கள்

கல்லுாரி விடுதிகளில் அடிப்படை வசதிகளுக்கு ஏக்கம்: இடநெருக்கடியில் தவிக்கும் மாணவர்கள்


ADDED : அக் 16, 2025 11:52 PM

Google News

ADDED : அக் 16, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார், திருச்சுழி, அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார் ஆகிய 5 இடங்களில் அரசு கலை , அறிவியல் கல்லுாரிகளும், 12 தனியார் கலை கல்லுாரிகளும் செயல்பட்டு வருகிறது.

சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் 12 இளங்கலை பாடப்பிரிவுகளில் 620 இடங்களும், ஸ்ரீவில்லிபுத்துார் கல்லுாரியில் 5 பாடப்பிரிவுகளில் 280 இடங்களும், சாத்துார் கல்லுாரியில் 4 பாடப்பிரிவுகளில் 240 இடங்களும், திருச்சுழி கல்லுாரியில் 5 பாடப்பிரிவுகளில் 230 இடங்களும் அருப்புக்கோட்டை கல்லுாரியில் நான்கு பாடப்பிரிவுகளில் 240 இடங்கள் என மொத்தம் 1610 இடங்கள் உள்ளன.

கலந்தாய்வு முடிந்த பின்னர் இதில் 15 சதவீத கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும்.

விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 4 மாணவர்கள்,

4 மாணவியர் விடுதிகளும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை சார்பில் 2 மாணவர்கள், 3 மாணவியர் விடுதிகள் என மொத்தம் 13 கல்லுாரி விடுதிகள் உள்ளன.

இதில் அரசு கல்லுாரி உள்ள ஸ்ரீவில்லிபுத்துார், திருச்சுழியில் மாணவ மாணவியர் விடுதி இல்லை. மேலும் சிவகாசியில் ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதி கடந்த மாதம் கல்லூரி விடுதி யாக தரம் முடியத்தப்பட்டது.

அந்த விடுதியில் 50 மாணவர்களை சேர்க்க உத்தரவிட்ட நிலையில் வாடகை கட்டடத்தில் விடுதி செயல்படுவதால் அடிப்படை வசதிகள் இல்லை.

சிவகாசி அரசு கலை , அறிவியல் கல்லுாரியில் இளங்கலை, முதுகலை படிப்பில் 12 பாடப்பிரிவுகள் உள்ளதாலும், விரும்பிய பாடப்பிரிவுகள் கிடைப்பதாலும் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி தென்காசி, தேனி, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர். 60 சதவீதத்திற்கும் மேல் மாணவிகள் உள்ளனர்.

ஆனால் சிவகாசியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தற்காலிக கட்டடத்தில் மாணவியர் விடுதி இயங்கும் நிலையில், தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவர் விடுதி கல்லுாரி மாணவியர் விடுதியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கல்லுாரி விடுதிகள் புதிதாக கட்டப்படாமல் ஏற்கனவே பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்த பள்ளி விடுதியே கல்லுாரி விடுதியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் போதிய இடவசதி இன்றி மாணவ மாணவிகள் நெருக்கடியில் தங்கும் சூழல் நிலவுகிறது.

மேலும் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கல்லுாரி அருகே விடுதிகள் இல்லாததால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இதனால் கல்லுாரி விடுதிகளுக்கு கல்லுாரி அமைந்துள்ள பகுதியிலேயே சொந்த கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us