/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அகழாய்வு கண்காட்சியை பார்வையிடும் மாணவர்கள்
/
அகழாய்வு கண்காட்சியை பார்வையிடும் மாணவர்கள்
ADDED : ஜன 20, 2026 06:00 AM

சிவகாசி: விஜயகரிசல் குளம் அகழாய்வு பொருட்கள் கண்காட்சியை விஜய கரிசல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.
விஜய கரிசல்குளத்தில் மூன்று கட்ட அகழாய்வு பணிகளில் கிடைத்த 12 ஆயிரத்து 934 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிடுவதற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாது பல்வேறு வெளி மாவட்ட பள்ளி கல்லுாரி மாணவர்கள் வருகின்றனர். இந்நிலையில் விஜய கரிசர்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இயங்கி வரும் தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் மாணவர்கள் கண்காட்சியினை பார்வையிட்டனர். அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி விளக்கம் அளித்தார்.
அகழாய்வு இயக்குனர் கூறுகையில், அகழாய்வு பணிகளை பார்வையிடுவதற்காக ஏற்கனவே விருதுநகர் மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு பள்ளி கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் வந்துள்ளனர். பொங்கல் விடுமுறையில் அதிகமானோர் வந்து பார்வையிட்டு சென்றனர், என்றார்.

