நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி அருகே வெம்பக்கோட்டை தாலுகா தொம்பக்குளத்தை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது  மகன் செல்வ பிரவீன் 15, கீழ ராஜகுலராமன் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
படிப்பு சரியாக வராத நிலையில் பெற்றோர் டியூஷன் சேர்த்துள்ளனர். இதற்கிடையே யாரிடமும் பேசி பழகாமல் அமைதியாக இருந்து வந்தவர் படிப்பின் மீது நாட்டம் இன்றி விரக்தியில் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் தேர்வு எழுதிவிட்டு வந்த நிலையில் மாடியில் துாக்கிட்டு இறந்து கிடந்தார். கீழராஜகுலராமன் போலீசார் விசாரிக்கின்றனர்.

