sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நீச்சல் குளங்களில் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுகிறதா குறையுது ஆய்வுகள்

/

நீச்சல் குளங்களில் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுகிறதா குறையுது ஆய்வுகள்

நீச்சல் குளங்களில் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுகிறதா குறையுது ஆய்வுகள்

நீச்சல் குளங்களில் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுகிறதா குறையுது ஆய்வுகள்


ADDED : நவ 02, 2024 06:33 AM

Google News

ADDED : நவ 02, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நீச்சல் குளங்களில் பாதுகாப்பு முறைகள் சரிவர பின்பற்றப்படுகிறதா என்ற ஆய்வு குறைந்து வருகிறது. விபத்து அபாயத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பண்டிகை விடுமுறை உள்ளதால் விழிப்புணர்வோடு பயன்படுத்த பெற்றோரும் முன்வர வேண்டும்.

மாவட்டத்திலுள்ள தனியார், அரசு நீச்சல் குளங்களிலும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி செயல்பட 2023 ஏப்.ல் கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டிருந்தார். அதில் நீச்சல் பயிற்றுநர்கள், பயிற்றுநருக்கான கல்வித்தகுதி என்.ஐ.எஸ்., சான்று கட்டாயம் முடித்திருக்க வேண்டும் என்றும், நீச்சல் குளத்தின் வெளிப்புறத்தில் குறைந்தபட்சம்2 உயிர்க்காப்பாளர்கள் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு, பெண் பயிற்சியாளர்கள் மூலம் மட்டுமே பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் ஆய்வுகள் குறைந்து வருகின்றன. நீச்சல் குளத்தினுள் பாதுகாப்பு பொருட்கள் இருக்க வேண்டும்.

குளத்தில் நீரின் நிறம் மாறாமல் இருக்க தகுந்த குளோரின் அளவு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். 10 முதல் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் தகுந்த துணையோடு வந்துள்ளனராஎன்பதை உயிர்க்காப்பாளர், நீச்சல் பயிற்சியாளர்கள் கண்காணிக்கவேண்டும். ஆனால் இது தொடர்பான ஆய்வுகள் குறைவாகவே நடக்கின்றன.

இதனால் தற்போது உள்ள பண்டிகை விடுமுறை நாட்களில் நீச்சல் குளங்களுக்கு செல்லும் மக்கள் விபத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் நீச்சல் குளங்களில் இத்தகைய பாதுகாப்பு முறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க அடிக்கடி ஆய்வு செய்ய அறிவுறுத்த வேண்டும்.

அதே போல் தேவையான அளவு பெற்றோரும் முன்னெச்சரிக்கையோடு சிறுவர்களை அழைத்து செல்ல வேண்டும்.






      Dinamalar
      Follow us