ADDED : பிப் 08, 2024 08:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் சி.இ.ஓ., அலுவலகம் முன் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர், அலுவலர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு அனுமதித்த காலி பணியிடங்களை எவ்வித தடையுமின்றி நிரப்ப ஒப்புதல் அளிப்பது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அனைத்து நலத்திட்டங்கள் கிடைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயலாளர் துரைச்சாமி பாண்டியன் தலைமை வகித்தார். ஆலோசகர் சிவபெருமான், துணை தலைவர் ஐசக் சாம்ராஜ் முன்னிலை வகத்தனர்.

