ADDED : ஆக 20, 2026 11:58 PM

அ நிறம் | அளவு
விருதுநகர்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ ஜாக் சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் வட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் மனோகரன், தமிழக ஆசிரியர் கூட்டணி மகளிரணி நிர்வாகி ராமலெட்சுமி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டப் பொருளாளர் தமிழரசி, முன்னாள் கல்வி மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசினர்.
