ADDED : செப் 18, 2026 04:22 PM
அ நிறம் | அளவு
சிவகாசி, செப். 19-
சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி கணிப்பொறியியல் துறை, கணினி இயந்திரங்கள் அமைப்பு சார்பில் தேசிய அளவிலான கல்லுாரி மாணவர்களுக்கு ரைவோனெக்ஸா 26 என்ற தலைப்பில் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.
பி.எஸ்.ஆர்., கல்வி குழுமங்கள் தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி நிர்வாக இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி துவக்கி வைத்தனர். பெங்களூரு டாடா கன்சல்டன்சி சர்வீஸ் டெலிவரி மேலாளர் ராஜா சொக்கலிங்கம் பேசினார். பல்வேறு பொறியியல் கல்லுாரிகளைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை துறை தலைவர் பாலசுப்பிரமணியன், பேராசிரியர்கள் ராம திலகம், பழனிக்குமார், பிரியதர்ஷினி செய்தனர்.
