ADDED : ஆக 25, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட கோவில் பூசாரிகள் நலச்சங்க பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் எரிச்சநத்தத்தில் மாநில தலைவர் வாசு தலைமையில், மாநில பொருளாளர் சுந்தரம், தென் மண்டல தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலையில் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் கருப்பையா உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால பூஜை நடக்கும் கோயில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு துறைரீதியான ஓய்வூதியம், பணிப்பாதுகாப்பு வழங்கி ஆவணம் செய்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.