/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழு ஆய்வு, வருமானம், வயது வரம்பின்றி உதவி தொகை வழங்க முன்வர வேண்டும்; மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்
/
குழு ஆய்வு, வருமானம், வயது வரம்பின்றி உதவி தொகை வழங்க முன்வர வேண்டும்; மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்
குழு ஆய்வு, வருமானம், வயது வரம்பின்றி உதவி தொகை வழங்க முன்வர வேண்டும்; மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்
குழு ஆய்வு, வருமானம், வயது வரம்பின்றி உதவி தொகை வழங்க முன்வர வேண்டும்; மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்
ADDED : நவ 10, 2024 06:57 AM
விருதுநகர் : மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை குழு ஆய்வு, வருமானம் போன்ற வயது வரம்பின்றி வழங்க முன்வர வேண்டும் என ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் இந்திய செயல் தலைவர் நம்புராஜன் கூறினார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் அரசு ஆவணங்களின் படி 14 லட்சத்து 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்த்துறை மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவி தொகை வழங்கப்படுகிறது. இதில் மன வளர்ச்சி குன்றியோர், 75 சதவீதத்திற்கு மேல் உடல் ஊனமுள்ளவர், தசை சிதைவு பாதித்தவர், தொழுநோய் பாதித்தவர்கள், தண்டுவடம் பாதித்தோர் ஆகிய 5 பிரிவினருக்கு மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
பார்வையற்றோர், காதுகேளாதோர் உள்ளிட்ட மற்ற எல்லா மாற்றுத்திறனாளிகளுக்கும் வருவாய்த்துறை மூலம் மாதம் ரூ.1500 வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் வழங்கப்படும் உதவி தொகை வயது வித்தியாசமின்றி,வருமான உச்சவரம்பு இன்றி வழங்கப்படுகிறது. ஆனால் வருவாய்த்துறை மூலம் வழங்கும் உதவி தொகையில் வருமான உச்சவரம்பு பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்கு குறைவாக வருமானம் இருக்க வேண்டும் என்ற விதியோடு 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தான் வழங்கப்படுகிறது.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் உதவி தொகை வேண்டினால் மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் இருக்க கூடிய வயது தளர்வு குழுவுக்கு விண்ணப்பித்து அந்த குழு முடிவின் படி வழங்கப்படுகிறது.
இது 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்கு எதிரானது. அவர்களுக்கு குறைந்தபட்ச மருந்து மாத்திரைகள் வாங்க ஏழை, நடுத்தர குடும்பங்கள் சிரமப்படுகின்றன.
கூடுதலான செலவுகளை அக்குடும்பங்கள் சந்திக்கின்றன.
மாற்றுத்திறனாளி ஒரு குடும்பத்தில் உருவாகி விட்டால் அக்குடும்பம் கூடுதல் பொருட்செலவையும், துயரையும் சந்திக்கிறது என 2006ல் ஐ.நா., மாநாட்டு விதி கூறுகிறது. இக்கோரிக்கை தொடர்பாக அ.தி.மு.க., ஆட்சியில் போராடினோம். அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் எங்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அவரே முதல்வராகி தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை கண்டு கொள்ளாமல் உள்ளார். 2022ல் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் இதற்கு தீர்வு காண்பதாக கூறினார். ஆனால் இன்று வரை நடவடிக்கை இல்லை, என்றார்.