/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பேனர் கட்டியவர் மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி
/
பேனர் கட்டியவர் மின்சாரம் பாய்ந்து பரிதாப பலி
ADDED : நவ 20, 2024 02:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே சேத்துார் ஐந்து கடை பஜார் பகுதியில், இன்று நடக்கும் திருமணத்திற்காக, பிளக்ஸ் பேனர் வைத்தார்.
இதற்காக மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த பந்தல் கான்ட்ராக்டர் முத்துராஜ், 50, கூலித்தொழிலாளி முருகன் 45, ஆகியோர், டிரான்ஸ்பார்மர் அருகே நேற்று மாலை 6:00 மணிக்கு பேனர் கட்ட முயன்றனர்.
அப்போது, பிளக்ஸ் பேனரின் கம்பி டிரான்ஸ்பார்மரில் உரசியதில், மின்சாரம் தாக்கி இருவரும் துாக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்தில் முருகன் உயிரிழந்தார்; முத்துராஜ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

