sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விளைநிலங்களில் சாயும் நிலை மின்கம்பங்கள் பாதிக்கப்படுது பணிகள்; விவசாயிகள் அச்சம்

/

விளைநிலங்களில் சாயும் நிலை மின்கம்பங்கள் பாதிக்கப்படுது பணிகள்; விவசாயிகள் அச்சம்

விளைநிலங்களில் சாயும் நிலை மின்கம்பங்கள் பாதிக்கப்படுது பணிகள்; விவசாயிகள் அச்சம்

விளைநிலங்களில் சாயும் நிலை மின்கம்பங்கள் பாதிக்கப்படுது பணிகள்; விவசாயிகள் அச்சம்


ADDED : மார் 21, 2024 01:10 AM

Google News

ADDED : மார் 21, 2024 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பல விளைநிலங்களில் சாய்ந்த மின்கம்பங்கள் உள்ளன. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. ஆகவே இந்த மின்கம்பங்களை கண்டறிந்து பலப்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் விளைநிலங்களில் இலவச மின்சாரத்திற்காக ஆங்காங்கே மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இவை நட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டதால் தற்போது அவை சரிந்து வருகின்றன. சில மின்கம்பங்கள் வரப்பை ஒட்டி இருப்பதால் நீரோட்டம் காரணமாகவும் சரிந்து வருகின்றன. கால்நடை, மனிதன் என ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் விவசாயிகளுக்கு தான் இழப்பு ஏற்படும்.

இன்னொரு பக்கம் திருச்சுழி, நரிக்குடி போன்ற வறண்ட கண்மாய்களில் மேடான பகுதிகளிலும் இதே போல் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளாக பெய்து வரும் கனமழையால் பல கண்மாய்கள் நிரம்பி உள்ளன. இவற்றிலும் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன. ராஜபாளையத்தில் ஓராண்டுக்கு மாதங்கள் முன் கண்மாயில் மின்கம்பம் ஒன்று சரிந்தும் விழுந்துள்ளது.

இதே போல் பல விளைநிலங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து காணப்படுகின்றன. இதனால் வயர்கள் தாழ்வாகி விபத்து அபாயமும் ஏற்படுகின்றன. இதனால் டிராக்டரில் உழவு செய்ய முடியாமல் தவிக்கும் சூழல் உள்ளது. விவசாயத்திற்கு ஆதாரமான நீர் பாய்ச்சுவதில் சிக்கல் உள்ளது.

மாவட்ட மின்வாரியம் இதற்கென தனிக்குழு அமைத்து விளைநிலங்கள், நீர்நிலைகளில் வரும் மின்கம்பங்களை கண்டறிந்து அதன் பாதிப்பு தன்மையை ஆராய வேண்டும். சரிந்துள்ள மின்கம்பங்களை பலப்படுத்தி நேராக்கவும், நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கண்மாய்களில் வேறு பாதைகளில் நடவும், அதே போல் தாழ்வாக வயர் செல்வதை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us