/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கண்காணிப்பு கேமராவை உடைத்த மூவர் கைது
/
கண்காணிப்பு கேமராவை உடைத்த மூவர் கைது
ADDED : ஆக 17, 2025 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: திருத்தங்கல் செங்குளம் கண்மாய் பகுதி இரு நாட்களுக்கு முன்பு சிவகாசி மருதுபாண்டியர் மேட்டு தெருவை சேர்ந்த சுந்தர மகாலிங்கத்தை முத்துமாரி நகரைச் சேர்ந்த மதன்குமார், மாரீஸ்வரன் உள்ளிட்ட சிலர் கொலை செய்தனர்.
இந்நிலையில் மதன் குமார், மாரீஸ்வரன் வேலை பார்த்த இறைச்சி கடைக்கு சென்ற சுந்தர மகாலிங்கம் தரப்பைச் சேர்ந்த மாரிசெல்வம் 27, அவிநாஷ் 23, கவுதம் 22, ஆகியோர் கடையை அடித்து நொறுக்கி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் உடைத்தனர். கிழக்கு போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர்.