sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 ரயிலில் ரூ.1.26 லட்சம் புகையிலை, கஞ்சா பறிமுதல்

/

 ரயிலில் ரூ.1.26 லட்சம் புகையிலை, கஞ்சா பறிமுதல்

 ரயிலில் ரூ.1.26 லட்சம் புகையிலை, கஞ்சா பறிமுதல்

 ரயிலில் ரூ.1.26 லட்சம் புகையிலை, கஞ்சா பறிமுதல்


ADDED : டிச 29, 2025 06:21 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் ரூ.1.26 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை, கஞ்சா உள்ளிட்ட பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெங்களூரு --- -- நாகர்கோவில் ரயிலின் பொதுப் பெட்டியில் சந்தேகப்படும்படியாக 4 பைகள் உள்ளதாக ரயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று (டிச. 28) அதிகாலை 3:45 மணிக்கு விருதுநகர் வந்த அந்த ரயிலில் சோதனையிட்ட போலீசார், பைகளை கைப்பற்றினர்.

அதில் ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள 24.5 கிலோ தடைசெய்யப்பட்ட புகை யிலை, கூல் லிப் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இன்று விருதுநகர் உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் அவை ஒப்படைக்கப்படுகின்றன.

கஞ்சா டிச.26ல் தாம்பரம் -- - குருவாயூர் ரயிலின் பின்பக்க பொதுப் பெட்டியில் ரயில்வே போலீசார் சோதனையிட்டனர். அப்போது கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்த ரூ.ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 11 கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர். அதை ராமநாதபுரம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி களிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us