sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

/

போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜன 29, 2025 05:18 AM

Google News

ADDED : ஜன 29, 2025 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

சிவகாசி பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து போலீஸ் ஸ்டேஷன் செல்லும் ரோட்டில் அண்ணாதுரை காய்கறி மார்க்கெட், பட்டாசு கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. தவிர இந்த ரோட்டின் வழியாகத்தான் வாகனங்கள் பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.

இதனால் எப்பொழுதுமே இந்தப் பகுதியில் போக்குவரத்து நிறைந்திருக்கும். இந்நிலையில் மார்க்கெட் அருகே காலை 9:00 மணிக்கு மேல் லோடு வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்தி கடைகளுக்கு சரக்கு இறக்குகின்றனர். இதனால் டூவீலர்கள் செல்வதே சிரமமாக உள்ளது. கார் உள்ளிட்ட வாகனங்கள் வரும்போது போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது.

ஏனெனில் ரோட்டில் நிறுத்தப்படும் லோடு வேன்களால் வேறு எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. சரக்கு ஏற்ற, இறக்க வருகின்ற வாகனங்கள் காலை 7:00 மணிக்குள் வந்தால் போக்குவரத்தில் இடையூறு ஏற்படாது.

இது குறித்து போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதனை யாரும் கடைபிடிப்பதில்லை.

தவிர இதை ரோட்டில் டூவீலர்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது. எனவே போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us