/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி ரயில்வே பீடர் ரோடு விலக்கில் செயல்படாத டிராபிக் சிக்னல்கள்
/
சிவகாசி ரயில்வே பீடர் ரோடு விலக்கில் செயல்படாத டிராபிக் சிக்னல்கள்
சிவகாசி ரயில்வே பீடர் ரோடு விலக்கில் செயல்படாத டிராபிக் சிக்னல்கள்
சிவகாசி ரயில்வே பீடர் ரோடு விலக்கில் செயல்படாத டிராபிக் சிக்னல்கள்
ADDED : டிச 28, 2025 05:54 AM

சிவகாசி: சிவகாசி ரயில்வே பீடர் ரோடு நான்கு விலக்கு பகுதியில் டிராபிக் சிக்னல்கள் செயல்படாததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு விபத்திற்கும் வழி ஏற்படுகிறது.
சிவகாசி ரயில்வே பீடர் ரோடு நான்கு விலக்குப் பகுதியில் அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, செங்கமல நாச்சியார்புரம் ரோடு, வேலாயுத ரஸ்தா ரோடு, தபால் நிலையம் செல்லும் ரோடு பிரிந்து செல்கிறது. கார், பள்ளி, கல்லூரி வாகனங்கள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களும் வந்து செல்கின்றன. அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இருப்பதால் எப்பொழுதுமே இந்த ரோட்டில் போக்குவரத்து நிறைந்திருக்கும்.
இந்நிலையில் ரயில்வே பீடர் ரோடு விலக்கில் டிராபிக் சிக்னல்கள் செயல்படவில்லை. இதனால் அடிக்கடி இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. மேலும் சைக்கிள், டூ வீலரில் வருபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே இப்பகுதியில் டிராபிக் சிக்னல்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

