ADDED : பிப் 24, 2024 05:38 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்,: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் கிராம சுகாதார செவிலியர்களுக்கான பயிற்சி வகுப்பு கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
நோய்த்தடுப்பு மருத்துத்துறை, மருத்துவக்கல்வி இயக்குநரகம் மூலம் சமூக அளவிலான சிசு, பிறந்த குழந்தைகள் பராமரிப்பு குறித்து பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லுாரி முதல்வர் சீதாலட்சுமி, சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் யசோதாமணி, கலுசிவலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.
