ADDED : நவ 09, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நிலக்கடலை சாகுபடி உரித்தான விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன் தலைமை வகித்தார். தொழில் நுட்ப வல்லுநர் ஷீபா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் செல்விரமேஷ் உட்பட பலர் விளக்கினர். முன்னோடி விவசாயிகள் கலந்துரையாடல் நடந்தது. பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு இடு பொருட்களை வழங்கப்பட்டது. தொழில்நுட்ப வல்லுநர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.