ADDED : நவ 18, 2025 03:48 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் மாணவர்களுக்கான வனமும், வாழ்வும் பயிற்சி திட்ட துவக்க விழா, விரிவாக்க மையத்தில் துணை இயக்குனர் முருகன் தலைமையில் நடந்தது. உதவி வன பாதுகாவலர் ஞானப்பழம் வரவேற்றார்.
பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேசியதாவது: இன்று நம்முடைய பிள்ளைகளுக்கு மரங்களைப் பற்றி தெரியாது. அவர்கள் அலைபேசி உலகில் மூழ்கி விட்டனர். அவர்களை மீட்க இயற்கையை காப்பது, மரங்களை வளர்ப்பது குறித்து ஆசிரியர்கள் ரசனையுடன் கற்றுக் கொடுக்க வேண்டும்.
வீடுகள் தோறும் மரங்கள் வளர்க்க அறிவுறுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளி வளாகத்திலும் 50க்கும் மேற்பட்ட மரங்கள் நட வேண்டும். அதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் தினமும் தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும், என்றனர். தென்காசி எம்.பி., ராணி, சீர் மரபினர் நலவாரிய தலைவர் ராசா அருள்மொழி, நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன், முதன்மை கல்வி அலுவலர் அரவிந்தன் பங்கேற்றனர்.

