நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் விலங்கியல் துறை சார்பில் மல்பெரி தோட்டம், பட்டுப்புழு வளர்ப்பு எனும் தலைப்பில் மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை கல்லுாரிச் செயலாளர் மகேஷ் பாபு தலைமையில் நடந்தது.
இதில் சத்தீஸ்கர் டசார் பட்டு விதை நிறுவன இயக்குனர் செல்வக்குமார் பயிற்சி அளித்தார். கல்லுாரி தலைவர் சம்பத்குமார், உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, பொருளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சாரதி உள்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் அழகுமணிக்குமரன் நன்றி கூறினார்.

