ADDED : மார் 14, 2026 07:23 AM
அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் வேதியியல், இயற்பியல் துறைகள் சார்பில் மின் கலன்கள், உயர்மின் தேக்கி என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது.
கல்லுாரி ஆலோசகர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார். காரைக்குடி சிக்ரி முதன்மை விஞ்ஞானி செல்வகுமார் சுதாகர், ஓய்வு தலைமை விஞ்ஞானி ராஜு பேசினர். மின்கலன்கள், உயர்மின் தேக்கிகளின் செயல்முறைகள் குறித்து மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
கல்லுாரி இயற்பியல், வேதியியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
