sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நேரம் முடிந்த அனுமதிச்சீட்டு வைத்து உடைகல் ஏற்றி வந்த லாரிகள் விடுவிப்பு

/

நேரம் முடிந்த அனுமதிச்சீட்டு வைத்து உடைகல் ஏற்றி வந்த லாரிகள் விடுவிப்பு

நேரம் முடிந்த அனுமதிச்சீட்டு வைத்து உடைகல் ஏற்றி வந்த லாரிகள் விடுவிப்பு

நேரம் முடிந்த அனுமதிச்சீட்டு வைத்து உடைகல் ஏற்றி வந்த லாரிகள் விடுவிப்பு


ADDED : ஜூலை 17, 2025 12:24 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டியில் நேரம் முடிந்த அனுமதி சீட்டுடன் உடைகல் ஏற்றி வந்த லாரிகளை தாசில்தார் விடுவித்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரியாபட்டியில் நேற்று காலை 11.50 க்கு இரு லாரிகளில் உடைகல் ஏற்றி சென்றன. தாசில்தார் மாரீஸ்வரன் லாரிகளை நிறுத்தி ஆய்வு செய்தார். அனுமதிச்சீட்டில் நேரம் முடிந்திருந்தது. இதனால் இரு லாரிகளையும் தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி, ஒரு மணி நேர விசாரணைக்கு பின் இரு லாரிகளையும் விடுவித்தார். சில தினங்களுக்கு முன் அனுமதி சீட்டு இன்றி கிரசர் தூசி ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்படி இருக்கும்போது இரு லாரிகளையும் உடனடியாக விடுவித்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாரீஸ்வரன், தாசில்தார் ,'' உடைகல் ஏற்றி வந்த இரு லாரிகளை மறித்து ஆய்வு செய்த போது, அனுமதிச்சீட்டில் நேரம் முடிந்திருந்தது. தாலுகா அலுவலகத்திற்கு லாரிகள் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டது. இரு லாரிகளிலும் பழுது ஏற்பட்டதால் காலதாமதம் ஆனதாக டிரைவர்கள் காரணம் தெரிவித்தனர். மனிதாபிமானம் அடிப்படையில் இரு லாரிகளையும் விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மற்றபடி யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை, என்றார்.






      Dinamalar
      Follow us