ADDED : மார் 03, 2026 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் 2023 முதல் 2024 வரை எடை குறைவாக பிறந்து, தற்போது ஆரோக்கியமாக உள்ள 40 இரட்டை குழந்தைகள் ஒன்று கூடும் விழா டீன் ஜெயசிங் தலைமையில் நடந்தது.
மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, நிலைய மருத்துவ அலுவலர் வைஷ்ணவி, குழந்தைகள் நலத்துறை தலைவர் செந்தில்குமரன், மகப்பேறு நலத்துறை தலைவர் கீதா, இணை, உதவிப் பேராசிரியர்கள், செவிலியர்கள், ஜே.சி.ஐ., விருதுநகர் எலிட் உள்பட பலர் பங்கேற்றனர்.

