sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ராஜபாளையத்தில் போலீசாரை தாக்கிய வழக்கில் மேலும் இருவர் கைது

/

ராஜபாளையத்தில் போலீசாரை தாக்கிய வழக்கில் மேலும் இருவர் கைது

ராஜபாளையத்தில் போலீசாரை தாக்கிய வழக்கில் மேலும் இருவர் கைது

ராஜபாளையத்தில் போலீசாரை தாக்கிய வழக்கில் மேலும் இருவர் கைது


ADDED : நவ 17, 2024 07:52 AM

Google News

ADDED : நவ 17, 2024 07:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் போதையில் தகராறு செய்த இளைஞர்களை விசாரிக்க சென்ற போலீசாரை தாக்கிய வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் போலீசாரை தாக்கும் வீடியோ வெளியானது.

ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே தனியார் பார் முன் நவ.10 இரவு 10:.15 மணிக்கு இளைஞர்கள் சிலர் பிரச்னை செய்வதாக புகார் வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வடக்கு போலீஸ் ஏட்டுகள் ராம்குமார், கருப்பசாமி இளைஞர்களை கலைந்து செல்ல கூறியுள்ளனர்.

இதில் ஆவேசம் அடைந்த இளைஞர்கள் போலீசாரின் லத்தியை பிடுங்கி அவர்களை கடுமையாக தாக்கினர். தகவல் அறிந்த எஸ்.ஐ., மாரியம்மாள் தலைமையிலான போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீசாரை தாக்கியதாக கீழஆவரம்பட்டி தெருவை சேர்ந்த பால்பாண்டி 32, கிளிராஜ் 24, பாஞ்சாலி ராஜன் 40, பாண்டியராஜ் 22, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய சரவண கார்த்தி 33, முத்துராஜ் 34 ஆகியோர் நவ.13ல் கைது செய்யப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அடைக்கலம் அளித்ததாக நேற்று முன்தினம் வனராஜ் 25, கருப்பசாமி 25, என தற்போது வரை எட்டு பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய வீடியோ நேற்று வெளியானது. மேலும் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய நபர்களான தர்மலிங்கம் 32, மணிகண்டன் 20, ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us