நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியின் பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து முதல்வர் செந்தில் தலைமையில் உயர் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் டூவீலர் ஊர்வலம் சென்றனர்.
விருதுநகரில் துவங்கி, அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரை சென்று பின், துாத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி வழியாக மீண்டும் விருதுநகரில் முடிவடைகிறது. இதில் 41 பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நேரில் சென்று மாணவர்களக்கு அரசு உதவித்தொகை திட்டங்கள் பற்றி விளக்குகின்றனர். கல்லுாரி செயலாளர் மகேஷ் குமார், துணை செயலாளர் நடராஜன் துவக்கி வைத்தனர்.

