/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஒன்றிய அலுவலக வளாகத்தில் பயன்பாடற்ற கட்டடங்கள்
/
ஒன்றிய அலுவலக வளாகத்தில் பயன்பாடற்ற கட்டடங்கள்
ADDED : அக் 28, 2024 04:57 AM

நரிக்குடி, : நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பயன்பாடின்றி கிடக்கும் கட்டடங்களில் புதர்மண்டி, விஷப் பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால் அலுவலர்கள், பயனாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. அனைத்து அலுவல் பணிகளும் புதிய கட்டடத்தில் நடைபெறுகின்றன. நல்ல நிலையில் இருக்கும் பழைய கட்டடங்கள் பயன்பாடின்றி கிடக்கின்றன. புழக்கம் இல்லாததால் புதர் மண்டி, விஷப் பூச்சிகளின் கூடாரமாக இருந்து வருகின்றன.
அப்பகுதியில் அதிக அளவில் விஷப்பூச்சிகள் நடமாடுவதால் அலுவலர்கள், பயனாளர்கள் என பலரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. அதிகாரிகள் புதர்களை அகற்றி கட்டடத்தை பயன்பாட்டிற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என எதிர்பார்க்கின்றனர்.

