ADDED : பிப் 17, 2026 07:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: சிவகாசி ஈஞ்சாரில் கிராம உதவியாளர், வி.ஏ.ஓ.,வை தாக்கிய தி.மு.க., நிர்வாகியை கைது செய்ய தாமதிக்கும் போலீஸ் நிர்வாகத்தை கண்டித்து விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டத் தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முருகேசன், வட்டச் செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். வட்ட பொருளாளர் செல்வி நன்றிக்கூறினார். கிராம உதவியாளர்கள் சங்கத்தினரும் பங்கேற்றனர்.

