ADDED : ஆக 28, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் குறு, சிறு நிறுவனங்கள் மத்திய அரசு, அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் புதிய ஒப்பந்தப்பணிகளை பெற்றிடும் வகையில் தனியார் துறை விற்பனையாளர் மேம்பாட்டு கண்காட்சி நடந்தது, கலெக்டர் சுகபுத்ரா, மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி நாராயணன் அப்பு முன்னிலை வகித்தனர். இக்கண்காட்சியில் அரசு, பொதுத்துறையைச் சேர்ந்த 40 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன.
சிப்பி பொது மேலாளர் அன்புராஜ், என்.எல்.சி முதன்மை செயல் அலுவலர் அரவிந்த் ராஜா, என்.பி.சி.எல் இயக்குநர் திரு.அசோக் பாட்டியா, குறு, சிறு தொழில் நிறுவனம் இணை இயக்குனர் தயாளன், தமிழ்நாடு தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், உதவி இயக்குநர் கிரண் தேவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
