/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணம்
/
வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணம்
ADDED : டிச 10, 2024 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.
டிச.6ல் தொடங்கி நான்கு நாட்கள் காலை மாலை லட்சார்ச்சனை, அபிஷேகம், அலங்காரம் நடந்தது. நேற்று காலை திருக்கல்யாணத்தை முன்னிட்டு பத்மாவதி தாயார், வேட்டை வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. தாயார் சுவாமி கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அன்னதானம் நடந்தது. ராஜபாளையம் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை பரம்பரை அர்ச்சகர், அறங்காவலர் முரளி வெங்கட்ராமன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.