/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மண்டல நீச்சல் போட்டி விருதுநகர் கல்லுாரி முதலிடம்
/
மண்டல நீச்சல் போட்டி விருதுநகர் கல்லுாரி முதலிடம்
ADDED : ஆக 09, 2025 02:58 AM
ராஜபாளையம்,: மதுரை காமராஜர் பல்கலை மண்டல அளவிலான கல்லுாரி இடையேயான நீச்சல் போட்டியில் விருதுநகர் செந்தில்குமார் கல்லுாரி முதலிடம் பிடித்தது.
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரியில் நடந்த போட்டிகளை கல்லுாரி செயலர் பிரகாஷ் துவக்கி வைத்தார். விருதுநகர் மதுரை மாவட்டங் களைச் சேர்ந்த பல்வேறு கல்லுாரிகளில் இருந்து 210 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஒன்பது பிரிவுகளில் 2 வகையான தொடர் நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. மண்டல அளவிலான அனைத்து பிரிவுகளிலும் விருதுநகர் செந்தில் குமார் நாடார் கல்லுாரி முதலிடமும், ராஜ பாளையம் ராஜூக்கள் கல்லுாரி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ராமகிருஷ்ணன் பரிசு, சான் றிதழ்கள் வழங்கினார்.
ஏற்பாடுகளை உடற் கல்வி இயக்குனர் முத்துக் குமார் செய்திருந்தார். காமராஜர் பல்கலை மண்டல துணை ஒருங் கிணைப்பாளர் பால் ஜீவ சிங் நன்றி கூறினார்.