/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் பிடிப்பட்ட இருதலை மணியன் பாம்பு
/
விருதுநகரில் பிடிப்பட்ட இருதலை மணியன் பாம்பு
ADDED : செப் 20, 2011 09:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:விருதுநகர் எம்.பி., அலுவலகம் அருகே தஞ்சம் பகுந்த இருதலைமணியன்
பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
விருதுநகர் எம்.பி., மாணிக்கதாகூர் அலுவலகம் லட்சுமி காலனியில் உள்ளது.
இங்கு பொதுமக்கள் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. எம்.பி., அலுவலகத்திற்கு
பின் உள்ள பகுதியில் இருதலை மணியன் பாம்பு தஞ்சம் புகுந்தது. இதை பார்த்த
அப்பகுதி இரவுக்காவலர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்புத்துறையினர் இருதலை மணியன் பாம்பை பிடித்து, விருதுநகர்
வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்படி வனத்துறையினர் பாம்பை வனத்திற்குள்
விட்டனர்.