நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 89 வது குருபூஜை தினம் கொண்டாடப் பட்டது.
திருத்தங்கலில் உள்ள அவரது உருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மக்கள் கட்சியினருக்கு அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து அந்த இடத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வெண்கல சிலை அமைக்க பிள்ளைமார் சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

