ADDED : ஆக 23, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: பழைய பென்சன் திட்டத்தை வழங்குதல், உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் பணி வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தின் முன்பு சி.ஐ.டி.யு., போக்குவரத்து ஊழியர் சங்கம், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் 6வது நாளாக காத்திருப்பு போராட்டம் மத்திய சங்க தலைவர் திருப்பதி தலைமையில் நடந்தது.
இதில் வருவாய்த்துறை ஊழியர் சங்க முன்னாள் மாநில செயலாளர் பொன்ராஜ், அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்ட செயலாளர் சத்தியராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க தலைவர் ஜெகதீசன், மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்டக்குழு உறுப்பினர் முத்துவேலு உள்பட பலர் பங்கேற்றனர்.

