ADDED : நவ 22, 2025 04:33 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மாநில துணைத்தலைவர் அம்சராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். விஜய் ஆனந்த், செல்வி ஆகியோர் வரவேற்றனர். போராட்டத்தில் களப்பணியாளர்களின் பணிச்சுமையை பணிகளை முறைப்படுத்துவது, புற ஆதாரம், ஒப்பந்த முறை பணி நியமனத்தை முற்றிலும் கைவிடுவது, நில அளவர் பணியிடங்களை நிரப்புவது, ஊதிய முரண்பாடுகளை களைவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.
