/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பதிவு செய்யாமல் இயங்கும் மனநல மையங்களுக்கு எச்சரிக்கை
/
பதிவு செய்யாமல் இயங்கும் மனநல மையங்களுக்கு எச்சரிக்கை
பதிவு செய்யாமல் இயங்கும் மனநல மையங்களுக்கு எச்சரிக்கை
பதிவு செய்யாமல் இயங்கும் மனநல மையங்களுக்கு எச்சரிக்கை
ADDED : ஆக 16, 2025 11:54 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்கள், நிறுவனங்கள் ஒரு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்தார்.
அவரது செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் செயல்படும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டிற்கு ஆளானவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்கள், மையங்கள் மனநல பராமரிப்புச் சட்டம் 2017ன் படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் ஒரு மாத காலத்திற்குள் முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010. தொலைபேசி எண் : 044 - 2642 0965, Email : tnsmha@gmail.com முகவரியில் விண்ணப்பிக்கலாம். https://tnhealth.tn.gov.in /tngovin/dme/dme.php என்ற தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கலாம். விபரங்களுக்கு 044 - 2642 0965 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம், என்றார்.