sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு

/

வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு

வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு

வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு


ADDED : மே 25, 2025 06:58 AM

Google News

ADDED : மே 25, 2025 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி : செவல்பட்டி காலனியில் குடிநீர் குழாயில் திருகு இல்லாததால் வீணாகி தெருவில் தேங்கி வருவது, சக்தி மாரியம்மன் கோயிலில் இருந்து செவல்பட்டி செல்லும் ரோடு படுமோசமாக இருப்பது, பெரியார் நகரில் வீதிகள் பள்ளமாக இருப்பதால் கழிவு நீர் செல்ல வழி இன்றி தேங்கி துர்நாற்றம் வீசுவது உள்ளிட்ட காரணங்களால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

காரியாபட்டி பேரூராட்சியில் செவல்பட்டி காலனியில் வீதிகளில் போடப்பட்ட குடிநீர் குழாயில் திருகு உடைந்தது. மக்கள் தண்ணீர் பிடித்தது போக அடைக்க முடியாமல் மற்ற நேரங்களில் வீணாக வெளியேறி வருகிறது. வாறுகால் வசதி சரிவர இல்லாததால், தண்ணீர் வெளியேற வழி இன்றி வீதிகளில் தேங்குகிறது. சிறுவர்கள் அதில் விளையாடுவதால் தொற்று ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

கொசு உற்பத்தியால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்கள் வர வாய்ப்பு உள்ளது. சக்தி மாரியம்மன் கோயிலில் இருந்து செவல்பட்டி வரை செல்லும் ரோடு படு மோசமாக உள்ளது. இந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இடறி விழுகின்றனர். மயானத்திற்கு செல்பவர்கள் தட்டு தடுமாறி செல்கின்றனர்.

பெரியார் நகரில் பெரும்பாலான வீதிகள் ரோடு மட்டத்திலிருந்து 2 அடி பள்ளத்தில் உள்ளது. மழை நேரங்களில் தண்ணீர் வெளியேற வழி இல்லை. வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் செல்ல வாறுகால் வசதி கிடையாது. அடிக்கடி தண்ணீர் தேங்கி வருவதால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது. மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தெருவில் ஓடும் குடிநீர்


சுப்பையா, தனியார் ஊழியர்: காலனியில் சோனை கோயில் தெருக்களில் போடப்பட்ட குடிநீர் குழாயில் திருகு போடப்பட்டது. அதில் தண்ணீர் குறைந்த அளவு வந்ததால் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்காமல் போனது. வேறு திருகு போட வலியுறுத்தப்பட்டது. நடவடிக்கை இல்லாததால் திருகை கழட்டி வைத்து தண்ணீர் பிடித்து வருகின்றனர். பிடித்தது போக அடைக்க முடியாமல் தற்போது வீணாகி வீதியில் தேங்குகிறது. வாறுகால் வசதி இல்லாததால் வெளியேற வழி இல்லை. சிறுவர்கள் அதில் விளையாடுவதால் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அடிப்படை வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படுமோசமான ரோடு


திருமலை, தனியார் ஊழியர்: சக்தி மாரியம்மன்கோயிலில் இருந்து செவல்பட்டி வரை செல்லும் ரோடு படுமோசமாக இருக்கிறது. மாணவர்கள் செல்ல முடியவில்லை. வாகனங்களில் செல்பவர்கள் தட்டு தடுமாறி செல்ல வேண்டி இருக்கிறது. பல்வேறு ஊர்களுக்கு இந்த வழியாக செல்பவர்கள் சிரமப்படுவதால் ரோடு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடுகளுக்குள் செல்லும் மழை நீர்


பழனிச்சாமி, தனியார் ஊழியர்: பெரியார் நகரில் பெரும்பாலான வீதிகள் ரோடு மட்டத்திலிருந்து 2 அடி பள்ளத்தில் உள்ளது. மழை நேரங்களில் மழை நீர் நிரம்பி வீடுகளுக்குள் செல்கிறது. முறையான வாறுகால் வசதி இல்லாததால் தண்ணீர் செல்ல வழி இல்லை. மழை நேரங்களில் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைநீர், கழிவு நீர் எளிதில் வெளியேற வாறுகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us