sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சீரான நாட்களில் குடிநீர் சப்ளை

/

சீரான நாட்களில் குடிநீர் சப்ளை

சீரான நாட்களில் குடிநீர் சப்ளை

சீரான நாட்களில் குடிநீர் சப்ளை


ADDED : ஜூன் 08, 2025 11:22 PM

Google News

ADDED : ஜூன் 08, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் பல்வேறு தெருக்களில் குடிநீர் சப்ளை நாட்கள் இடைவெளி அதிகரித்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்க சீரான நாட்களில் குடிநீர் சப்ளை செய்வதை நகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் 33 வார்டுகளில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் குடிநீர் இணைப்புகள் உள்ளது. உள்ளூர் செண்பகத் தோப்பு நீர் ஆதார மூலம் சில வார்டுகளிலும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பெரும்பாலான வார்டுகளிலும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இதில் கடந்த சில வாரங்களாக குழாய் உடைப்பின் காரணமாக பல வார்டுகளில் குடிநீர் சப்ளை நாட்கள் இடைவெளி அதிகரித்து காணப்படுகிறது. இது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு ஒரு முறை அல்லது வாரத்திற்கு ஒரு முறையாவது சீரான இடைவெளியில் அனைத்து வார்டுகளிலும் போதிய குடிநீர் சப்ளை செய்வதை நகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us