sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

5 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

/

5 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

5 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

5 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்


ADDED : செப் 02, 2025 11:40 PM

Google News

ADDED : செப் 02, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி; திருத்தங்கல் பெரியகுளம் கண்மாயில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 20 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தும் இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதி மக்களுக்காக பெரியகுளம் கண்மாயில் 30 க்கும் மேற்பட்ட போர்வெல் அமைக்கப்பட்டு புழக்கத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகின்றது. 18 முதல் 22 வார்டு பகுதி மக்களுக்கு புழக்கத்திற்கு கூட தண்ணீர் இல்லை. இதற்காக 2019 ல் பெரியகுளம் கண்மாயில் ரூ. 20 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் இந்த சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வரவில்லை.

மேலும் தண்ணீர் வினியோகத்திற்காக இங்கிருந்து அமைக்கப்பட்ட இரும்பு குழாய்களை ஆங்காங்கே மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். தவிர சுத்திகரிப்பு நிலையம் முழுவதுமே சீமை கருவேல மரங்கள் சூழ்ந்து இருப்பதற்கு அடையாளமே தெரியவில்லை. இதனால் இப்பகுதியினர் புழக்கத்திற்கு மட்டுமின்றி குளிக்க, துணி துவைக்க என தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே உடனடியாக பெரியகுளம் கண்மாயில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us