ADDED : ஏப் 10, 2025 05:30 AM

அ நிறம் | அளவு
காரியாபட்டி: மல்லாங்கிணர் சென்ன கேசவ பெருமாள் கோயில் பங்குனி திருவிழா ஏப்.3ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்தது.
முக்கிய நிகழ்வான நேற்று பெருமாளுக்கும், செங்கமலத்தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
