sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரசு அலுவலகங்களில் திருமண நாள், கொண்டாட்டங்கள் தனிப்பட்ட விஷயங்களுக்கு தேவை தடை

/

அரசு அலுவலகங்களில் திருமண நாள், கொண்டாட்டங்கள் தனிப்பட்ட விஷயங்களுக்கு தேவை தடை

அரசு அலுவலகங்களில் திருமண நாள், கொண்டாட்டங்கள் தனிப்பட்ட விஷயங்களுக்கு தேவை தடை

அரசு அலுவலகங்களில் திருமண நாள், கொண்டாட்டங்கள் தனிப்பட்ட விஷயங்களுக்கு தேவை தடை


ADDED : ஜூலை 30, 2025 06:51 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் உட்பட அரசு அலுவலகங்களில் திருமண நாள், தனிப்பட்ட கொண்டாட்டங்களில் அரசு ஊழியர்கள் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இது பணியிடம் என்பதால் அதற்குரிய மாண்பை பின்பற்றுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், ஒன்றிய அலுவலகங்களில் பணி ஓய்வு பெறுவோருக்கு டீ பார்ட்டி வைப்பதும், பணிமாறுதல் ஆகி செல்வோர் பிரிவு உபசார விழாவிற்காக டீ பார்ட்டி வைப்பதும், வசதிக்கேற்ப தனி மண்டபங்களில் வைத்து விழா நடத்துவதும் அவரவர் பலம்.

இந்நிலையில் கடந்த வாரம் அரசு ஊழியர் தம்பதி, புதிய கலெக்டர் அலுவலகத்தில் கேக் வெட்டி திருமண நாள் கொண்டாடியுள்ளனர். உடன் பணிபுரிவோர் திருக்கினால் வெடிக்கும் கொண்டாட்ட பொருட்களை பயன்படுத்தி உள்ளனர். இதுபோன்ற செயல்பாடுகள் வரவேற்கதக்கதல்ல என உடன் பணிபுரியும் பலர் கூறுகின்றனர்.

சிறிதாக டீ பார்ட்டி என துவங்கிய கலாசாரம் இன்று பிறந்த நாள் கேக் வெட்டுவதையும் தாண்டி, தனிப்பட்ட கொண்டாட்டங்களான திருமண நாளுக்கு கேக் வெட்டுவது வரை வந்துள்ளது. இவர்கள் அலுவலர்கள் பொறுப்பில் இருப்பதால் ஊழியர்களும் மனமுகந்து செய்கின்றனர்.

இந்த கலாசாரம் எல்லா துறைகளிலும் பெருகி வருகிறது. தனிப்பட்ட கொண்டாட்டங்களால் பாதிப்பு இல்லை. ஆனால் அலுவலகம், பொதுமக்கள் வந்து செல்லுமிடம் என்பதால் அதற்கு ஒரு மாண்பு உள்ளது. வேறு இடங்களில் கொண்டாடலாம் என சக ஊழியர்கள் கூறுகின்றனர். எனவே அரசு அலுவலகங்களை தனிப்பட்ட கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us