sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாவட்டத்தில் பரவலாக மழை

/

மாவட்டத்தில் பரவலாக மழை

மாவட்டத்தில் பரவலாக மழை

மாவட்டத்தில் பரவலாக மழை


ADDED : அக் 12, 2025 06:37 AM

Google News

ADDED : அக் 12, 2025 06:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் விருதுநகர், அருப்புக்கோட்டையில் கனமழை கொட்டி தீர்த்து பகல் நேர வெப்பத்தை தணித்தது.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

ஆனால் நேற்று மதியம் 3:00 மணிக்கு மேல் மழை மேக கூட்டங்கள் உருவாகி விருதுநகரில் மதியம் 3:45 மணி முதல் கனமழை பெய்ய துவங்கியது.

இதே போல அருப்புக்கோட்டையில் மாலை 4:15 மணிக்கு துவங்கி மாலை 5:45 மணி வரை கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பள்ளி, கல்லுாரி முடியும் நேரத்தில் மழை பெய்ததால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி வீடு திரும்பினர்.

காரியாபட்டியில் மாலை 5:30 மணி முதல் மாலை 6:00 மணி வரையும், சிவகாசி, திருத்தங்கல்லில் மாலை 5:00 மணிக்கு மேல் சாரல் மழை பெய்ததது.

சாத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், அதனை சுற்றிய பகுதிகளில் மாலையில் மழை எதுவும் பெய்யாமல் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை மட்டும் நிலவியது.






      Dinamalar
      Follow us